நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பின் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இன்று பத்தாயிரத்திற்கு நெருங்கிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று (ஏப்-17) மாலை வரையான நிலவரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9 ஆயிரத்து 344 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் 39 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து 80 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது.அத்துடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 13 ஆயிரத்து 71 ஆக உயர்ந்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு